Thursday, July 20, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 4

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 4

மகரக் குறுக்கம் :

13 :

அரையளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை

வேறோர் எழுத்தினது ஓசையினால் மகர ஒற்று தன் அரைமாத்திரையில் இருந்து குறைந்து கால்மாத்திரையாக மாறிவிடும்.
உதாரணத்துக்கு "போன்ம், வரும் வண்ணக்கண்" இது பெரும்பன்மையான வழக்கிலில்லை..

எழுத்துகளின் வரிவடிவம்:

14 :
உட்பெறு புள்ளி உருவா கும்மே

"ம"கரம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியது.

அதாவது ப என்ற எழுத்தின் உள் புள்ளி வைத்தால் அது " ம " என்ற எழுத்தாக பழங்காலத்தில் கருதப்பட்டு வந்தது. தற்போதைய வழக்கில் இல்லை.


15 :
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலைய

மெய் எழுத்துகள் புள்ளியோடு இருக்கும்.

16 :
எகர ஒகரத்து இயற்கையும் அன்றே.


எ மற்றும் ஓ மெய்போலவே புள்ளி பெற்று வரும் என்பதாம். இப்போது வழக்கில் இல்லை.

17:
புள்ளியில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனையு உயிரோடு உருவுதிருன் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்தவாரே


மெய்யெழுத்துகள் "அ" வுடன் சேர்ந்தபோது புள்ளி நீங்கி அகரத்தோடு சேர்ந்து
ஒலிக்கும். மற்ற உயிரெழுத்துடன் சேரும் போது அதன் வடிவம் மாறி அந்த
உயிரெழுத்துடன் சேர்ந்து ஒலித்தலும் என இருவகையில் வரும்.

எ.கா :
க ங கா கீ கூ

18 :
மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே

உயிர் மெய் எழுத்துகளில் ஓசை / ஒலியானது மெய்யெழுத்தின் ஓசை / ஒலி
முதலில் தோன்றி அதற்கு பிறகு

வல்லினம் / மெல்லினம் / இடையினம்

19 :
வல்லெழுத் தென்ப கசட தபற

20 :
மெல்லெழுத் தென்ப ஙஞணநமன

21 :
இடையெழுத் தென்ப யரல வழள

பழைய பாடம் தான் :)

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்
"யாருமிங்கே ஓரினம்"

அன்புடன்
ஐயப்பன்