Showing posts with label மொழியாதல். Show all posts
Showing posts with label மொழியாதல். Show all posts

Monday, July 07, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 3 : எழுத்துகள் மொழியாதல்

10 : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி

உயிர் நெடில் ஏழும் ஓரெழுத்து ஒருமொழியாய் வரும்.
(எ.கா)
ஆ : பசு
ஈ : கொடு
ஊ : உணவு
ஏ : கூர்மை
ஐ : தலைவன்
ஓ : ஓசை
கௌ : கவ்வுதல்

11 : குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

உயிர்க்குறில் ஐந்தும் ஒரு மொழியாகும் இயல்புடையன அல்ல

12 : ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

மொழி மூவகைப்படும். ஓரெழுத்து ஒருமொழி (ஆ), ஈரெழுத்து ஒருமொழி ( மணி), இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வரும் மொழி (ஆண்டு, ஆடவர் )

செல்வி ஷங்கர் 07072008