Monday, July 07, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 2 : அளபெடை

08: குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே

சொல்லின் ஓசை குறைந்த இடத்து அதன் ஈற்றில் நெட்டெழுத்திற்குப்பின் அதற்கு இனமான குற்றெழுத்து நின்று ஓசையை நிறைவு செய்யும். அது அளபெடை எனப்படும். (எ.கா) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ

09 : ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசைநிறை வாகும்

ஐ ஔ என்ற இரண்டு நெட்டெழுத்திற்கும் அதன் ஈற்றில் இகரமும் உகரமும் இனமாய் நின்று ஓசையை நிறைவு செய்யும். (எ.கா) ஐஇ ஔஉ

செய்யுளில் ஓசை குறைந்த இடத்து நெட்டெழுத்து ஏழும் தன் மாத்திரையில் இருந்து நீண்டொலிப்பது அளபெடை எனப்படும்.
அளவு + எடை - அளவு நீண்டொலித்தல்.

(எ.கா) உழாஅர் ( உழமாட்டார்)

செல்வி ஷங்கர் 07072008

1 comments:

said...

இன்னிசை அளபெடை-ன்னு வேறு சொல்றாங்களே! அப்படின்னா என்னங்க?